Saturday, March 28, 2015

வீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை (Veeriya Vellari Saagubadiyil Saathanai) - Hybrid cucumber cultivation

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் வீரிய வெள்ளரி சாகுபடியில் செஞ்சி விவசாயிகள் சாதனை படைத்து வருகின்றனர்.
செம்மண் பூமியாக உள்ள மேல்மாம்பட்டு, தொரப்பாடி, ஈயகுணம், எய்யில், தாதங்குப்பம், தாயனூர், கண்டமநல்லூர், மேல் அருங்குணம், புத்தகரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங் களில் வெளிநாடுகளுக்கு ஊறுகாய் தயாரித்து ஏற்றுமதி செய்யும் வீரிய வெள் ளரியை (மாத்திரை காய் ) சாகுபடி செய்கின்றனர்.
குறைந்த இடம்
வீரிய வெள்ளரியை 20 சென்ட் முதல் 1 ஏக்கர் வரை ஆடி, கார்த்திகை, சித்திரை என மூன்று பட்டத்தில் சாகுபடி செய்கின்றனர்.
விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான விதை, உரம், பூச்சி மருந்துகளை தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்கின்றன.
விதைப்பு, கொடிகள் படர வலைகள் அமைக்கின்றனர். விதைத்த பிறகு 30 வது நாள் முதல் அறுவடை துவங்கி விடும்.
50 சென்ட் சாகுபடி செய்த நிலத்தில் அறுவடை துவங்கியதும் தினம் நூறு கிலோவில் துவங்கி அதிகளவாக 600 கிலோ வரை மகசூல் உயர்ந்து பிறகு படிப்படியாக குறைகிறது.
சராசரியாக தினசரி 250 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.
காய்களை கொள்முதல் செய்யும் நிறுவனங் கள் உற்பத்தி செய்யும் இடத்திலேயே காய்களை வாங்கி செல்கின்றனர்.
50 சென்டில் சாகுபடி செய்யும் விவசாயி ஒரு முறை 15 ஆயிரம் கிலோ மகசூல் எடுக்கிறார்.
மூன்று வகை விலை
அளவில் சிறிதாக உள்ள பிஞ்சு காய்களுக்கு கிலோ ஒன்றுக்கு 22 ரூபாயும், அடுத்த ரகத்திற்கு 10 ரூபாய், முற்றிய பெரிய ரகத்திற்கு 3 ரூபாய் தருகின்றனர்.
சராசரியாக ஒரு கிலோ 12 முதல் 13 ரூபாய் வரை கிடைக்கிறது. இதன்படி 50 சென்ட் பயிரிடும் விவசாயி 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை பெறுகிறார்.
40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த தொகையை அறுவடை முடிந்த ஒருவாரத்தில் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி விடுகின்றனர்.
சொட்டு நீர் பாசனம்
வீரிய வெள்ளரி பயிரிடுவதற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களிலும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதிகளை வெள்ளரி காய்களை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் செய்து தருகின்றன.
சொட்டுநீர் பாசன வசதியை முறையாக பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
இதற்கான தொகையை முதல் சாகுபடி தொகை வழங்கும் போது இந்நிறுவனத்தினர் பிடித்தம் செய்து விடுகின்றன.

ஆட்கள் தேவை
வீரிய வெள்ளரி பயிரிடுவதில் முதல் 30 நாட்கள் வரை விவசாயிகளின் குடும்பத்தினரே அனைத்து வேலைகளையும் செய்கின் றனர்.
காய் பறிக்க துவங்கிய பிறகு தினமும் 3 முதல் 6 ஆட்கள் வரை தேவைப்படுகிறது. இவர்களுக்கு அரை நாள் கூலியாக நூறு முதல் 120 ரூபாய் வரை வழங்குகின்றனர்.
வெளிநாட்டு வர்த்தகம்
வீரிய வெள்ளரிகளை கொண்டு பெங்களூரு நிறுவனங்கள் ஊறுகாய் தயாரிக்கின்றனர். இவை அமெரிக்க, ரஷ்யா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
வெளிநாடுகளிள் இதை பயிர் செய்தாலும், சரியாக வளர்த்து தினமும் அறுவடை செய்ய ஆட்கள் இல்லை. எனவே ஒரே முறை மட்டும் சாகுபடி செய்து மொத்தமாக ஒரே நாளில் அறுவடையை முடித்து விடுகின்றனர்.இதனால் முதல் தரமான காய்கள் கிடைப்பதில்லை.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் ஊறுகாய்கள் முதல் தரமானது என்பதால் வெளிநாடுகளில் இந்திய ஊறுகாய்களுக்கு கிராக்கி உள்ளது.
தமிழகம் முதலிடம்
இந்த வகை வீரிய வெள் ளரிகளை உற்பத்தி செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இதில் செஞ்சி தாலுகா மேல்மாம்பட்டு கிராமத்தில் இருந்து ஆண்டுக்கு நான்காயிரம் டன் உற்பத்தி செய்கின்றனர். வறண்ட பகுதியான செஞ்சி பகுதியில் குறைந்த தண்ணீர் செலவில் நிறைந்த வருவாய் ஈட்டும் விவசாயிகள் சத்தமின்றி இந்தியாவிற்கு கணிசமான அன்னியச்செலானியை ஈட்டி தந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment