Wednesday, March 18, 2015

கால்நடைகளுக்கு புல் வகை மற்றும் மர இலை தீவனங்கள் (Kaal Nadaigaluku Pul Vagai Matrum Mara Elai Theevanangal) - The Grass and Tree Leaves for Cattle Feed


மது நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஒரு சதவீதம் என்ற அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கால்நடைகளிருந்து முழுமையான பலனை பெற வேண்டுமென்றால், அவற்றுக்கு சரிவிகித முறையில் தீவனம் இடவேண்டும். ஆனால் எண்ணிக்கையில் அதிகரிக்கும் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தில் 60 சதவிகிதம், உலர்ந்த நார்த்தீவனத்தில் 60 சதவிகிதம், கலப்பு தீவன வகைகளில் 60 சதவிகிதம் மட்டுமே உற்பத்தி செய்கிறோம்.




தீவனமரங்களின் இலைகளில்
 இதனால் ஊட்டசத்து குறைபாடு ஏற்படுகிறது.  இந்த பற்றாக்குறையை போக்க நாட்டிலுள்ள தரிசுநிலங்களை தீவன உற்பத்திக்காக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இந்த இடங்களில் தீவன மரங்களை வளர்க்க வேண்டும். தானிய வகை தீவனங்களான மக்காச்சோளம், புல்வகை தீவனங்களான கொழுக்கட்டை புல், பாரா, பயறு வகை சேர்ந்த ஸ்டைலோ, தட்டைப்பயிறு, வேலிமசால், சூபாபுல், கிளைரிசிடியா போன்றவற்றை சாகுபடி செய்யலாம்.

பொதுவாக தீவனமரங்களின் இலைகளில்20 முதல் 40 சதவிகிதம் உலர்பொருளும், 12 முதல் 32 சதவிகிதம் வரை புரதச்சத்தும் உள்ளன.


மர இலைகள்  

செரிமான புரதச்சத்தும் 60 முதல் 65 சதவிகிதமாக உள்ளது. குறிப்பாக மர இலைகள் தீவனமாக அகத்தி, கிளைரிசிடியா, சவுன்டால், கொடுக்காப்புளி, வாகை, முள்ளு முருங்கை போன்ற மரங்களை பயன்படுத்தலாம். இவை தவிர அன்றாடம் கிடைக்கக்கூடிய அரசமரம், ஆலமரம், மா, பலா, வேம்பு, நுணா, பூவரசு, முருங்கை, உதியன், மந்தாரை, கருவேல் போன்ற மரத்தழைகளை தீவனமாக அளிக்கலாம்.




மர இலைகளில் பிற தீவனப்புற்களில் இருப்பதை விட குறைந்த நார்ச்சத்து, குறைவான செரிக்கும் திறன் கொண்டதால் இவற்றின் மூலமாக கிடைக்கும் எரிசக்தி குறைவாக உள்ளது. மர இலைகளில் தாதுப்பொருட்களான சுண்ணாம்புசத்து அதிக அளவிலும், பாஸ்பரஸ் சத்து குறைந்த அளவிலும் உள்ளது.


வெள்ளாடுகளுக்கு
இந்த நிலையில் கால்நடைகளுக்கு தீவன மரங்களின் இலைகளையும், பிற புல் வகைகளையும் கலந்து அளிக்க வேண்டும். இதனால் ஒன்றில் கிடைக்காத சத்து மற்றொன்றின் மூலம் ஈடுகட்டப்படும். மேலும் அளிக்கப்படும் இந்த வகை தீவனங்கள் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்குதலுக்கு உட்படாதவாறும் இருக்க வேண்டும். உதாரணமாக, வெள்ளாடுகளுக்கு இந்த வகை தீவனங்களை வழங்கும் போது, தழைத் தீவனத்தில் இலைகள் 50 சதவிகிதமும், மீதம் 50 சதவிகிதம் பிற புல் வகைகளும் இருக்கலாம். இவ்வாறு கலந்து அளிப்பதால் வெள்ளாடுகள் தினசரி 45 முதல் 55 கிராம் வரை உடல்வளர்ச்சி அடைகின்றன.

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete