Saturday, January 17, 2015

துல்லிய பண்ணையம்

மண்ணினைத் தயார் செய்தல்
மண்ணின் ஹியுமிக் அமிலம், நுண்ணுயிரிகள், காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி ஆகியவை சரியான அளவில் பேணப்படுவதோடு மண் வளம் கீழ்க்கண்ட முறைகளில் அதிகரிக்கப்படவேண்டும்.
பசுந்தாள் உரம்
வாழை ஒன்றுக்கு ஜிப்சம் 2 கிலோ இடுதல்
வேப்பம் புண்ணாக்கு
பாஸ்போபாக்டீரியா
  • பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பையை பயிரிடுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு விதைத்து, அது பூக்கும் பருவத்தில் வயலினுள் மடித்து உழவு செய்யவேண்டும்
  • செஸ்பேனியா மற்றும் சணப்பையினை வாழைக்கன்று நட்ட பின் விதைத்துப் பின் 60 நாட்களில் அவற்றில் விதை வரும் முன்பு மடித்து உழுது விடவும்.
  • வாழை ஒன்றுக்கு ஜிப்சம் 2 கிலோ, அதோடு ஒரு வாழை மரத்துக்கு 15 கிலோ தொழு உரம் அல்லது ஒரு எக்டருக்கு 45 டன்கள் என்ற அளவில் இடுவதால் மண்ணின் அமில காரத்தன்மை சரியான அளவில் அமைந்து, நுண் மற்றும் பேரூட்டச் சத்துக்கள் பயிருக்குச் சரியான அளவில் கிடைக்கின்றன.
  • எக்டருக்கு 25 லிட்டர் பொட்டாசியம் ஹியுமேட் கன்று நட்ட 3 மற்றும் 5வது மாதங்களில் இடுவதால் அங்ககத் தன்மை அதிகரிக்கச் செய்யும்.
  • வாழைக்கன்று ஒன்றிற்கு 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு + தென்னை நார்க் கழிவு அல்லது கோழிக் குப்பை அல்லது நெல் உமிச் சாம்பல் 14 கிலோ என்றளவு இடுவதாலும் மண்ணில் அங்கக தன்மை அதிகரிப்பதோடு, நூற்புழுக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றது.
  • வேம் (VAM- வெஸிகுலார் அர்பஸ்குலார் மைக்கோரைசா) 20 கிராம் + பாஸ்போபாக்டீரியா 20 கிராம் + அஸோஸ்பைரில்லம் 50 கிராம் + டிரைக்கோடெர்மா ஹர்ஸியானம் 20 கிராம் கலந்த கலவையினை வாழை ஒவ்வொன்றுக்கும் இடுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை வேர் மண்டலத்தில் அதிகரிக்கச் செய்யலாம்.

நாற்றங்கால் தயார் செய்தல்
துல்லிய பண்ணைய முறை பயிரிடுதலுக்கு திசு வளர்ப்பு வாழைகளைப் பயன்படுத்தவும், திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை சாதாரண இடைக்கன்று வாழைகளைக் காட்டிலும் சீரான மற்றும் வேகமான வளர்ச்சி கொண்டவை. இவை கிட்டதட்ட 20 நாட்களுக்கு முன்பே பூப்பதோடு, 35 நாட்கள் சாதாரண வாழைகளை விட குறைந்த பயிர்க் காலம் கொண்டவை. அதோடு, அதிக மகசூல் தரக்கூடியவை. திசு வளர்ப்பு வாழைகளை தேர்வு செய்யும் போது கீழ்க்கண்ட கருத்துக்களை நினைவில் கொள்ள வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

திசு வளர்ப்பு வாழைக் கன்றுகள்
திசு வளர்ப்பு நாற்றுகள் வளர்ச்சியடைதல்
செடி வளர தேவையான ஊடகமும் மணலும் பாலிதீன் பையில் நிரப்புதல்
5 இலைகளுடன் கூடிய திசு வளர்ப்பு வாழைக்கன்று
  • 45 முதல் 60 நாட்கள் நன்கு கடினப்படுத்தப்பட்ட குறைந்தது 30 செ.மீ. உயரமும், 5 – 6 செ.மீ. வெளித்தண்டுச் சுற்றளவும் கொண்ட கன்றுகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் கன்றில் நன்கு ஒளிச்சேர்க்கை நடைபெறும் 5 இலைகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள இடைவெளி 5 செ.மீ. க்கு குறையாமல் இருப்பது மிக முக்கியம்.
  • இரண்டாம் நிலை கடினப்படுத்தலின் முடிவில் சுமார் 25-30 ஆணி வேர்கள் கிழங்கில் இருக்கவேண்டும்.
  • ஆணி வேரின் நீளம் 15 செ.மீ க்கு அதிகமாக, இரண்டாம் நிலைப் பக்க வேர்களுடன் அமைந்திருக்கவேண்டும்.
  • பாலித்தீன் பையானது 20 செ.மீ. நீளமும், 16 செ.மீ. விட்டமும் கொண்டதாக இருக்கவேண்டும். இந்த பையின் முக்கால் பாகத்திற்கு மண் கலவையை நிரப்பவேண்டும்.
  • இந்த மண் கலவையானது உலர் எடை அளவில் 750 – 800 கிராம் எடை இருக்கவேண்டும்
  • இலைப்புள்ளி, தண்டு அழுகல் மற்றும் வினையியல் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏதுமற்று இருக்கவேண்டும்.
  • கன்றுகள் எர்வினியா அழுகல் நோய், நூற்புழுவினால் ஏற்படும் புள்ளிகள், வேர் முடிச்சுகள் போன்ற வேர் நோய்க்காரணிகளற்று ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். கன்றுகளை வாங்குவதற்கு முன் சரி பார்த்து வாங்க வேண்டும்.
  • அபரிமித வளர்ச்சி பெற்றிருக்கும் கன்றுகளை தேர்வு செய்யக்கூடாது.

தண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம்

கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. பல தோட்டங்களில், அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர பாசனத்திலேயே கிணறு வற்றி விடுகிறது. அதனால், 'புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கலாமா?, கிணற்றைத் தூர் வாரலாமா?’ என்று குழம்பித் தவிக்கும் விவசாயிகளுக்காக... கோடை காலத்தில் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர் வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ்.
''கோடை காலங்களில் கிணறுகள், போர்வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்துதான் காணப்படும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போயிருப்பதுதான் தண்ணீர் குறைவுக்குக் காரணம். கோடையில் உங்கள் கிணறுகளில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்தாலும்... 'இன்னமும் உங்கள் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக்கிறது’ என்றுதான் அர்த்தம். அதனால், கவலைகொள்ளத் தேவையில்லை. கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியுமோ... அந்த அளவுக்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும். குறிப்பாக, வாய்க்கால் பாசனத்தைத் தவிர்க்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக, குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பாசனம் செய்யலாம். அதனால், புது போர்வெல் பற்றி யோசிக்கத் தேவையில்லை'' என்ற பிரிட்டோ ராஜ் தொடர்ந்தார்.
போர்வெல் போடாதீர்கள்!
''பொதுவாக, கோடை காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடை காலங்களில் தண்ணீர் இருக்காது. 80 அடி, 150 அடி,
320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால்,தண்ணீரைத் தேடி அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும். அதிக ஆழத்துக்கு ஊடுருவி, 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும்... போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேல்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமெண்ட் போல மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை

மண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை
பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.
இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன.
ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.
எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்க வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் மண் புழு உரத்தின் பயன்பாடுகள் மற்றும் மண் புழு உற்பத்தி குறித்து கூறியது:
மண்புழு உரத்தின் பயன்கள்: நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.
பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனயீன், ஆக்ஸின், பலவகை நொதிகள் உள்ளன.
மற்ற மட்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
செழிப்பான பயிர் வளர்ச்சி, அதிக மகசூல் எடுக்க வழி வகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
மண் புழு உரம் தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொள்வதால் வருமானம், வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

Friday, January 16, 2015

செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் தீவன மேலாண்மை

செம்மறி ஆடுகளின் தீவன மேலாண்மை

செம்மறி ஆடுகளின் வயதுக்கேற்ற தீவனப் பராமரிப்பு

1.பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்கான தீவனம்
i.பெட்டை ஆடுகளின் உடல் பருமனைக் குறைத்தல்
Feeding lactating does
  • உடல் பருமனால் உடலில் அதிக கொழுப்புச் சேர்ந்து இனப்பெருத்தத் திறனைக் குறைக்கும்.
  • ஒரு நல்ல மேய்ப்பாளன், இனப்பெருக்கக் காலத் துவக்கத்திற்கு முன் குறைந்தது ஒன்றரையிலிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆடுகளின் உடல் பருமனைக் கண்காணித்தல் வேண்டும்.
  • உடல் பருத்த பெட்டைகளை தீவனக் குறைப்பு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் தேவையான சீரான உடலமைப்பிற்கும் படிப்படியாகக் கொண்டு வர முடியும்.
  • பெட்டைகளை இனப்பெருக்கத்திற்கு தயார்படுத்த சீரான மேற்பார்வையின் மூலம் தீவனக் குறைப்பு மற்றும் தீவிர உடற்பயிற்சி அளிக்க வேண்டும்
 ii.பெட்டைகளுக்கான இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனம்
Feeding lactating does
  • இனப்பெருக்கத்திற்கு சுமார் இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன்னரே, பெட்டைகளின் உடல் எடையை அதிகரிக்கும் வகையில் அவற்றின் தீவனத்தில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க வேண்டும்.
  • இதன் மூலம், பெட்டைகள் விரைவில் சினைப்பருவம் எய்தவும், குட்டிகள் ஈனவும் வழிவகுக்கலாம்.
  • மேலும், பெட்டைகளின் சினைப்பருவ இடைவெளி சமமானதாகவும், குட்டி ஈனும் எண்ணிக்கை சீரானதாகவும் அமையும்,
  • அது மட்டுமல்லாமல், இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனமளித்தல் மூலம் குட்டி ஈனும் விகிதத்தையும், ஒரே ஈற்றில் பல குட்டிகள் ஈனும் விகிதத்தையும் அதிகரிக்கலாம்.
  • இந்தியாவில், இந்த காலம் பொதுவாக மே மாத இறுதியில் வருகின்றது.
  • தீவன மூலப் பொருட்கள் கிடைப்பதைப் பொருட்டு வெவ்வேறு வகையான இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பரிந்துரைக்கப்பட்ட இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள்
  • பயிறு மற்றும் புல் வகைத் தீவனங்களின் ஒரு நல்ல கலவை.
  • ஒரு ஆட்டிற்கு, ஒரு நாளைக்கு புல் தீவனத்துடன், 150 கிராம் கோதுமைத் தவிடு.
  • புல் தீவனத்துடன் 250 கிராம் தானியம், 450 கிராம் புண்ணாக்கு.
  • பயிறு வகை உலர் புல்லுடன் 100 கிராம் கோதுமைத் தவிடு, 150லிருந்து 200 கிராம் தானியம் மற்றும் ஒரு ஆட்டிற்கு, ஒரு நாளைக்கு உடல் எடையில் 10 சதவிகித அளவு பசும்புல் மற்றும் 150லிருந்து 200 கிராம் அடர் தீவனம்.

தீவன உற்பத்தி

தீவன உற்பத்தி

பயறு வகை தீவனப் பயிர்கள்
தட்டைப் பயறு / காரமணி
  • இந்த பயிர் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மற்றும் குளிர் பிரதேசங்களில் வளரக் கூடியது.
  • தட்டைப்பயிரை பசுந்தீவனமாகவும், மேய்ச்சல் தரையாகவும்,  உலர் தீவனமாகவும் மற்றும் ஊறுகாய் புல் தயாரிப்பில் மக்காசோளம் மற்றும் சோளப்பயிருடன் கலந்து உபயோகிக்க வளர்த்தப்படுகிறது.
  • மூன்று பருவ காலங்களில் பயிரிடலாம்.
  • வருடந்திர பயிராக பயிரிடலாம்.
  • ரகங்கள் – CO5, ரஷ்யன் ஜெய்ண்ட், EC 4216, UPC – 287 மற்றும் உள்ளுர் வகைகள்.
  • விதையளவு – 40 கிலோ / ஹெக்டர்.
  • அறுவடை விதைத்த 50 -55 நாட்களில் (50% பூக்கும் தருணத்தில்)
  • CO5 ரகமானது  பாசன வசதியுள்ள இடங்களில் பயிரிட ஏற்றது.    (ஜூன் – ஜூலை மாதங்களில்)
CO5 ரகத்தின் குணங்கள
  • பசுந்தீவன உற்பத்தி டன் / ஹெக்டர் --18 to 20
  • உலர் பொருள் அளவு (%) – 14.64
  • கச்சாப் புரதம் (%) – 20.00
  • பயிரின் உயரம் ( செ.மீ.) – 93.00
  • கிளைகள் – 2-3
  • இலைகள் – 12
  • இலையின் நீளம் (செ.மீ.) – 12.1
  • இலையின் அகலம் (செ.மீ.) – 8.2
  • இலை தண்டு விகிதம் – 8.3
  • பயிரின் அமைப்பு – பாதி விரிந்த அமைப்பு.
  • பயிரின் வகை – நடுத்தர வகை

வேலிமசால
  • இப்பயிர் நீர்பாசன வசதியுள்ள இடங்களில் வருடம் முழுவதும், மானாவரியில் ஜீன் – அக்டோபர் மாதங்களிலும் பயிரிடலாம்.
  • விதையின் அளவு 20 கிலோ / ஹெக்டர் .பார் அமைத்து கரையின் ஒரங்களில் உரங்கள் இட்டபிறகு, 2 செ.மீ. ஆழத்தில் விதைகளை இட்டு மண்ணால் மூடிவிடவேண்டும்.
  • விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பிறகு 3 வது நாளும் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
  • முதல் அறுவடை, விதைப்பு செய்த 90 நாட்கள் கழித்து அல்லது பயிர் 50 செ.மீ உயரம் வளர்ந்தவுடன் செய்யலாம். பிறகு 40 நாட்களில் இடைவேளியில் அதே உயரத்தில் அறுவடை செய்யலாம்.

குதிரை மசால்
  • குதிரை மசால் தீவனப்பயிர்களின் ராணி என அழைக்கப்படுகிறது.
  • இது நன்கு ஆழமாக வேரூன்றி வருடம் முழுவதும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வளரக்கூடிய பயிராகும்.
  • நல்ல சுவையுள்ள பயிராகும். கச்சா புரதம் 15-20 சதவீதம் உள்ளது.
  • இப்பயிர்களின் வேர்முடிச்சுகளால் நுண்ணுயிரிகள் பெருகி காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து மண்ணில் நிலை படுத்துவதால் மண் வளம் அதிகரிக்கிறது.
  • இதை பசுந்தீவனமாகவும்,உலர்தீவனமாகவும், ஊறுகாய் புல் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். ஆனால் மேய்ச்சல் தரையாக பயன்படுத்த இயலாது.
  • ரகங்கள் – ஆனந்த் 2, சிர்ஸா -9, IGFRI S – 244, and கோ -1.
  • கோ 1 ரகம் ஜூலை – டிசம்பர் காலத்திற்கு எற்றது.
  • குதிரை மசால் மிக வெப்பமான மற்றும் மிகவும் குளிர் பிரதேசங்களுக்கு ஏற்றது அல்ல.
  • விதை அளவு. – 20 கிலோ / ஹெக்டர்.
  • முதல் அறுவடை விதைப்பு செய்து 75-80 நாட்கள் கழித்தும், பிறகு 25 – 30 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்.

கொட்டகை மேலாண்மை

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான கொட்டகையமைப்பு

பொது அனுமானங்கள்

Low cost houseOpen type housing with run space
 Sheep in open spaceFodder Cultivation near by shed

 

  • மிதமான உற்பத்தி திறனுக்கு, குறைந்த செலவிலான, கட்டுமான பொருட்களை கொண்டு சாதாரண கொட்டகை அமைத்தல்.
  • அதிக மழை பெய்யும் இடங்களைத் தவிர, நாட்டின் பிற இடங்களில் மண் தரையிலான கொட்டகையே ஏற்றது.
  • தண்ணீர் தேங்குவதை தவிர்க்க மேடான பகுதிகளில் கொட்டகை அமைத்தல் வேண்டும்.
  • வளரும் ஆடுகளின் தீவனத் தேவைக்கு கொட்டகையை சுற்றிலும் பசுந்தீவன மரங்களை வளர்த்தல்.
  • ஆடுகளுக்கு தூய்மையான குடிநீரை கிடைக்கச் செய்தல்.
  • நுல்ல காற்றோட்டமான அமைப்புடன் கொட்டகை அமைத்தல்.
  • கொட்டகையின் தரையானது நல்ல கெட்டியான முறையில் தண்ணீரை உறிஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். தரையை எளிதில் சுத்தம் செய்வதற்கு உகந்தவாறு அமைத்தல் நல்லது.
  • பராமரிப்பு முறைக்கு ஏற்றவாறு கொட்டகைகளை அமைத்தல் வேண்டும்.
  • திறந்த நடைவழி பகுதி மற்றும் கூரை அமைக்கப்பட்ட பகுதிகள் கொண்ட திறந்த வெளி கொட்டகை சிறந்தது.
  • நடைவழி பகுதியை கட்டு கம்பி கொண்டு சுற்நி அமைத்தல் நல்லது.
  • இரவு மற்றும் மழை காலங்களில் தங்குவதற்கு உகந்த கொட்டகையமைப்பு அவசியமாகும்.
  • காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் கொண்ட கிழக்கு , மேற்கு திசையில் அகலப்பகுதி இருக்குமாறு அமைத்தால் தரையானது நன்கு காய்ந்திருக்கும்.
  • குறைந்த செலவு மற்றும் தாங்கும் திறன் கொண்ட தென்னை மற்றும் பனை ஓலையிலான கூரை மிகவும் சிறந்தது.
  • அதிக தாங்கும் திறன் மற்றும் பழுது பார்க்கும் செலவுகளை குறைக்கவல்ல ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் பெரிய பண்ணைகளுக்கு ஏற்றது.
  • சிறிய கொட்டகைகளுக்கு சாய்வான கூரைகளே சிறந்தது.
  • காலை நேரங்களில் மேய்ச்சலுக்கும் இரவு நேரங்களில் கொட்டகைகுன்றம் வளர்க்கப்படும். ஆடுகளுக்கு கூரை வேயப்பட்ட இடவசதியே போதமானது.
  • கூரை பகுதி மற்றும் திறந்த வெளி நடை பகுதி கொண்ட கொட்டகையமைப்பு தீவிர முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு உகந்தது.
  • கொட்டகையமைப்பின்  அகலப்பகுதியானது 8 முதல் 12 மீட்டருக்கு மிகாமல் இருக்குமாறு அமைத்தலும், நீளப்பகுதியானது ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கட்டுபாடின்றி அமைத்துக் கொள்ளலாம்.
  • கூரையின் நடுப்பகுதியின் உயரம் 3.5 மீட்டராகவும், பக்கவாட்டு பகுதியின் உயரம் 2.5 மீட்டராக இருத்தல் நல்லது.
  • கொட்டகையை சுற்றி அமைக்கப்படும் கட்டுக் கம்பி அமைப்பின் உயரம் 4 அடியாக இருத்தல் வேண்டும்.
  • அடர் தீவனம், பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் வைப்பதற்கு ஏற்றவாறு தனித்தனி தீவன மற்றும்
  • தண்ணீர் தொட்டிகள்அமைத்தல் நல்லது.

இடவசதி தேவைகள்

இந்திய சூழலுக்கு உகந்த பரிந்துரைக்கப்பட்ட இடவசதி : மற்றும் குட்டி ஈன்ற ஆடுகள்

வயதுகூரை அமைக்கப்பட்ட பகுதிதிறந்த வெளிப் பகுதி
மூன்று மாதம் வரை
0.2 – 0.25
0.4 – 0.5
மூன்று முதல் ஆறு மாதம் வரை
0.5 – 0.75
1.0 – 1.5
6-12 மாதங்கள்
0.75 – 1.0
1.5 – 2.0
பெரிய ஆடுகள்
1.5
3.0
கிடா, சினை ஆடுகள்
1.5 – 2.0
3.0 – 4.0

ஒரு ஆட்டிற்கு தேவையான இடவசதி  (இந்திய தகுதிப் பிரிவு)  பரிந்துரைகள்

ஆடுகளின் வகை    ஒரு ஆட்டிற்கு தேவையானகுறைந்த பட்ச இடவசதி
கிடாக்கள்  -  (குழுக்கள் முறையில்)    1.8
கிடாக்கள்  –  (தனிப்பட்ட முறையில்)3.2
குட்டிகள் (குழுக்கள் முறையில்)0.4
தாயிடமிருந்து பிரித்த குட்டிகள்0.8
ஒரு வருட வயதான ஆடுகள்0.9
பெட்டை ஆடுகள் (குழுக்கள் முறையில்)1.0
பெட்டை ஆடுகள் (குட்டிகளுடன்)1.5

ஆட்டு இனங்கள்

செம்மறியாட்டினங்கள்

 1.மேச்சேரி

  • இவ்வினம் தமிழ்நாட்டின் சேலம் கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும், தருமபுரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகின்றது.
  • இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுகிறது
  •     நடுத்தர உடலமைப்பு கொண்டது. இதனுடைய தோல் வெளிறிய சிவப்பு நிறத்தில் இருக்கும்.
  • கிடாவுக்கும், பெட்டை ஆடுகளுக்கும் கொம்புகள் கிடையாது
  • வால் குட்டையாகவும், மெலிதாகவும் இருக்கும்
  • வளர்ச்சியடைந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 22 கி.கி எடையுடனும் இருக்கும்.

     

2. சென்னை சிவப்பு
  • இவ்வினம் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகின்றது.
  • இறைச்சி உற்பத்திக்காகப் பயன்படுகின்றது
  • சிவப்பு நிறம், இளம்சிவப்பு முதல் கரும்சிவப்பு வரை கொண்டது
  • சில ஆடுகளுக்கு முன்நெற்றி, அடிவயிறு மற்றும் கால்களுக்கிடையில் வெள்ளைநிறம் காணப்படும்
  • வளர்ந்த கிடா 36 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 24 கி.கிஎடையுடனும் இருக்கும்.

     
3. இராமநாதபுரம் வெள்ளை
  • இவ்வினம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காணப்படுகின்றது.
  • இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது
  • நடுத்தர உடலமைப்பைக் கொண்டது
  • பெரும்பாலும் வெள்ளை நிறத்திலிருந்தாலும் சில ஆடுகளில் உடல் முழுவதும் கருமைநிறப் பட்டைகள் காணப்படும்
  • கிடாவுக்கு முறுக்கிய வளைந்த கொம்புகள் உண்டு, பெட்டைக்கு கொம்புகள் கிடையாது.
  • கால்கள் சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும்
  • வளர்ந்த கிடா 31 கி.கி எடையுடனும், பெட்டை ஆடுகள் 23 கி.கி எடையுடனும் இருக்கும்
     

கோழிகளைப் பற்றிய பொதுவான தகவல்கள்

கோழிகளைப் பற்றிய பொதுவான வார்த்தைகள்

இனம்
இளம் வயது
வயது முதிர்ந்த கோழிகள்
சேவல்
பெட்டை
கோழி
கோழிக்குஞ்சு
சேவல்
பெட்டைக்கோழி
வாத்துகள்
வாத்துக்குஞ்சு
டிரேக்
வாத்து
வான்கோழி
பவுல்ட்
டாம்
வான்கோழி
காடை
காடைக் குஞ்சு
காடை சேவல்
காடைக்கோழி
கினிக்கோழி
கீட்
கினிசேவல்
கினிக்கோழி
கூஸ் வாத்து
கூஸ்லிங்
கேன்டர்
கூஸ்
புறா
ஸ்குவாப்
ஆண் புறா
பெண் புறா
அன்னம்
சிக்னெட்
ஆண் அன்னம்
பெண் அன்னம்

பல்வேறு கோழியினங்களின் அடை காக்கும் காலம், குரோமோசோம்களின் எண்ணிக்கை, இனப்பெருக்க முதிர்ச்சியடையும் காலம்
வ.எண்
இனம்
அடை காக்கும் காலம் (நாட்களில்)
குரோமோசோம்களின் எண்ணிக்கை( இரட்டையில்)
இனப்பெருக்க முதிர்ச்சியடையும் வயது (வாரங்களில்)
1.
கோழி
21
39
18-20
2.
வாத்து
28
40
28-30
3.
மஸ்கோவி
33-35
40
28-30
4.
கூஸ்
28-32
40
28-30
5.
கினிக்கோழி
27-28
39
28-32
6.
வான்கோழி
28
40
28-30
7.
காடை
17-18
39
6-7
8.
புறா
18
39
10-12
9.
ஆஸ்ட்ரிச்
42
40
52
10
ஈமு
52-55
40
52

கோழிகளின் இனங்கள்
கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.         
  • அமெரிக்க கோழியினங்கள்
  • ஆசிய கோழி இனங்கள்   
  • ஆங்கில கோழி இனங்கள்  
  • மத்திய கோழி இனங்கள்
வகை
அமெரிக்கன்
ஆசிய இனங்கள்
ஆங்கில இனங்கள்
மத்திய கோழி இனங்கள்
தாடி
இறகுகள் அற்றது
இறகுகள் உடையது
இறகுகள் அற்றது
இறகுகள் அற்றது
தோல் நிறம்
மஞ்சள்
மஞ்சள்
வெள்ளை
மஞ்சள் அல்லது வெள்ளை
காது மடல் நிறம்
சிவப்பு
சிவப்பு
சிவப்பு
வெள்ளை
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும்
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும்
இறைச்சிக்காக
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும்
முட்டைக்காக
Size
நடுத்தரம்
பெரியவை
நடுத்தரம்
சிறியவை
முட்டை ஓட்டின் நிறம்
பழுப்பு
பழுப்பு
பழுப்பு
வெள்ளை
உதாரணங்கள்
1) ரோட் ஐலேண்ட் ரெட்
2)பிளை மவுத் ராக்
3)நியூ ஹேம்ப்ஷையர்
4)வியன்டோட்
1) )பிரம்மா
2) கொச்சின்
3) லாங்ஷான்
1) கார்னிஷ்
2) அஸ்ட்ரா லார்ப்
3) டார்க்கிங்
4) ஆர்பிங்டன்
5) சசெக்ஸ்
1) லெகார்ன்
2) மைனார்க்கா
3) அன்கோனா
4) ஆன்டலூசியன்

கோழிகள் அவற்றின் உபயோகத்திற்கேற்ப கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
1) முட்டைக்கோழி இனங்கள் - Eg.வெள்ளை லகார்ன், மைனார்கா, அன்கோனா
2) இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.கார்னிஷ்,பிளை மவுத் ராக், பிரம்மா
3) இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.ரோட் ஐலேண்ட் ரெட்,நியூ ஹேம்ப்ஷையர்
4) விளையாட்டுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.அசீல்
 5) அழகுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg. சில்க்கி, ஃபிரிசில்டு, பேந்தம்ஸ்
 6) உள்நாட்டின கோழியின இனங்கள் - Eg. கடக்நாத், நேக்ட் நெக், சிட்டகாங்.

கோழிப்பண்ணையினை கட்டுதல்

கோழிப்பண்ணைக்கான தேவைகள்

  • பல்வேறு விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க
  • எளிதாகவும், பொருளாதார ரீதியாக குறைந்த செலவிலும் கோழிப்பண்ணையை நடத்த
  • அறிவியல் பூர்வமாகவும், கட்டுப்பாடான முறையிலும் கோழிகளுக்குத் தீவனமளிக்க
  • கோழிகளைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தில் முறையாகப் பேணுதல்
  • நோயினைக் கட்டுப்படுத்த
  • கோழிப்பண்ணையினை முறையாக மேலாண்மை செய்ய
கோழிப்பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்தல்
  • வசிப்பிடங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் கோழிப்பண்ணைகள் தொலைவில் இருக்கவேண்டும்.
  • கோழிப்பண்ணைக்கு நன்றாக சாலை வசதிகள் இருக்கவேண்டும்.
  • அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மின்சார வசதி போன்றவை இருக்கவேண்டும்.
  • குறைந்த கூலிக்கு பண்ணையாட்கள் கிடைக்கும் இடத்தில் பண்ணை அமைக்கவேண்டும்.
  • கோழிப்பண்ணை நல்ல மேடான இடத்தில் இருக்கவேண்டும். தண்ணீர் தேங்கும் இடத்தில் இருக்கக்கூடாது.
  • கோழிப்பண்ணை அமைக்கும் இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும்.

கோழிப்பண்ணையின் வடிவமைப்பு
                                         
ஒரே கொட்டகை மட்டுமே இருப்பதால் ஒரு சிறிய கோழிப்பண்ணைக்கென தனியான வடிவமைப்புகள் தேவைப்படாது. நடுத்தர மற்றும் பெரிய பண்ணைகளுக்கு பண்ணை வீடுகளை அமைப்பதில் சரியான வடிவமைப்பு தேவை. இதில் கடைபிடிக்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்களாவன.
  • பார்வையாளர்களையும், வெளியிலிருந்து வரும் வாகனங்களையும் கோழிகளுக்கு அருகில் அனுமதிக்காதவாறு பண்ணைகள் வடிவமைக்கப்படவேண்டும்.
  • தூய காற்று குஞ்சுக்கொட்டகையில் முதலில் நுழைந்து, பிறகு வளரும் கோழிக்கொட்டகையில் சென்று கடைசியாக முட்டைக்கோழி கொட்டகைக்குள் செல்லுமாறு கோழிப்பண்ணைக் கொட்டகைகள் வடிவமைக்கப்படவேண்டும். இதனால் முட்டைக்கோழிகளிடமிருந்து குஞ்சுக்கோழிகளுக்கு நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
  • குஞ்சுக்கோழிக் கொட்டகைக்கும், வளரும் கோழிக்கொட்டகைக்கும் இடையில் குறைந்தது 50-100 அடி இடைவெளியும், வளரும் கோழிக் கொட்டகைக்கும் முட்டைக் கோழிக் கொட்டகைக்கும் இடையில் 100 மீட்டர் இடைவெளியும் இருக்கவேண்டும்.
  • முட்டை சேமிக்கும் அறை, அலுவலகம், தீவனம் சேமிக்கும் அறை போன்றவை பண்ணையில் நுழைவு வாயிலிலேயே அமைக்கப்படுவதால், கோழிப்பண்ணைகளைச் சுற்றி ஆட்கள் நடமாடுவதைத் தவிர்க்கலாம்.
  • இறந்த கோழிகளைப் புதைக்கும்குழி, மற்றும் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளைப் பராமரிக்கும் அறை போன்றவை பண்ணையின் ஒரு மூலையில் அமைக்கப்படவேண்டும்.

கோழிப்பண்ணையிலுள்ள பல்வேறு விதமான கோழிக்கொட்டகைகள்

  • குஞ்சுக் கொட்டகை-இக்கொட்டகை முட்டைக் கோழிக்குஞ்சுகளின் 0 முதல் 8 வார வயது வரை பராமரிக்க உபயோகிக்கப்படுகிறது.
  • வளரும் கோழிக் கொட்டகை-இக்கொட்டகை முட்டைக் கோழிகளின் 9-18 வார வயதில் பராமரிக்கப் பயன்படுகிறது.
  • குஞ்சுக் கோழி மற்றும் வளரும் கோழிக்கொட்டகை இக்கொட்டகையில் கோழிகளை 0-18 வார வயதில் வளர்க்கப் பயன்படுகிறன்றது.
  • முட்டைக்கோழிக் கொட்டகை-18 வார வயதிலிருந்து 72 வார வயது வரை முட்டைக் கோழிகளை வளர்க்க இக்கொட்டகை பயன்படுகிறது.
  • கறிக்கோழிக் கொட்டகை-இக்கொட்டகையில் கறிக்கோழிகளை 6 வார வயது வரை வளர்க்கப் பயன்படுகிறது.
  • இனப்பெருக்கக் கோழிக் கொட்டகை-இக்கொட்டகைகளில் பெட்டைக்கோழிகளும், சேவல்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்க்கப் பயன்படுகிறது.
  • சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கொட்டகை-இக்கொட்டகைகளில் கோழிகள் வளர்வதற்கேற்றவாறு கொட்டகையின் சுற்றுப்புற சூழ்நிலை கட்டுப்படுத்தப்படுகிறது.

கோழிக்குஞ்சுகளைப் பராமரித்தல்

கோழிக்குஞ்சுகளைப் பராமரித்தல்

கோழிக்குஞ்சுகளை வளர்க்கும் கலைக்கு புரூடிங் என்று ஆங்கிலத்தில் பெயராகும். புதிதாக பொரிக்கப்பட்ட கோழிக் குஞ்சுகளுக்கு அவற்றின் உடல் வெப்பநிலையினை சீராக வைத்திருக்க முடியாது. சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கோழிக்குஞ்சுகள் தயாரவதற்கு இரண்டு வாரங்களாகும். எனவே அவற்றின் முதல் சில வார கால வயதில் அவற்றால் தங்களுடைய உடல் வெப்பநிலையினை சீராக வைத்திருக்க முடியாது. இந்த சூழ்நிலையில் கோழிக்குஞ்சுகளை குளிரான சூழ்நிலைக்கு உட்படுத்தினாலோ அல்லது கவனிப்பு குறைவாக இருந்தாலோ அவற்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விடும்.
கோழிக்குஞ்சு பராமரிப்பில் இரு முறைகள் உள்ளன
  1. இயற்கையான முறையில் பராமரித்தல்
  2. செயற்கை முறையில் பராமரித்தல்
இயற்கையான முறையில் பராமரித்தல் 
          இம்முறையில் தாய்க்கோழியே அவற்றின் குஞ்சுகளை 3-4 வார வயது வரை பாதுகாக்கும்.

செயற்கை முறையில் பராமரித்தல் 
          இம்முறையில் அதிக எண்ணிக்கையிலான கோழிக் குஞ்சுகள் தாய்க்கோழியின் உதவியின்றி வளர்க்கப்படுகின்றன. கோழிக் குஞ்சுகளை வளர்க்கும் கொட்டகையில் கீழ்க்கண்ட பொருட்கள் இருக்கும்.
    1. கொட்டகையினை சூடாக்கும்ஆதாரம்
    2. வெப்பத்தை எதிரொலிக்கும் பொருட்கள்
    3. குஞ்சுகளைப் பாதுகாக்கும் அமைப்பு
கோழிக் கொட்டகையினை சூடாக்கும் ஆதாரம் மின்சாரம் அல்லது, இயற்கை எரிவாயு அல்லது எல்பிஜி மற்றும் மீத்தேன், மண்ணெண்ணெய் போன்ற திரவ எரிபொருள்கள் அல்லது திட எரி பொருட்களான கரி, விறகு போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

கரி அடுப்பு அல்லது மண்ணெண்ணெய் அடுப்பு:
மின்சாரம் இல்லாத பகுதிகளில் சாதாரண கரி அல்லது மண்ணெண்ணெய் போன்றவற்றை உபயோகித்து குஞ்சுகளுக்கு செயற்கையாக வெப்பத்தை அளிக்கலாம். இந்த அடுப்புகளின் மீது தட்டு அல்லது பாத்திரங்களை வைத்து மூடி அவற்றிலிருந்து வெப்பம் கொட்டகையில் வெளியேறுமாறு செய்யலாம்.

வாயு மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம் :
இயற்கை எரி வாயு அல்லது எல்பிஜி அல்லது மீத்தேன் வாயு மூலம் இணைக்கப்பட்ட சூடாக்கும் கம்பியினை தரையிலிருந்து 3-5 அடி உயரத்தில் கொட்டகையில் தொங்க விட்டு குஞ்சுகளுக்கு வெப்பத்தை அளிக்கும் வகையில் செய்யலாம்.

மின்சாரம் மூலம் இயங்கும் வெப்ப ஆதாரம்:
இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூடாக்கும் ஆதாரமாகும். இந்த இயந்திரம் தேவைப்படும் அளவு வெப்பத்தை ஒரு பெரிய இடத்தில் சீராகப் பரப்பும் தன்மையுடையது. இவ்வாறு வெப்பத்தை சீராகப் பரப்புவதால் கோழிக்குஞ்சுகள் வெப்ப ஆதாரத்திற்கு அருகில் கூட்டமாக இருப்பது தடுக்கப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் வெப்ப ஆதாரம் ஒன்றின் மூலம் சாதாரணமாக 300-400 குஞ்சுகளைப் பராமரிக்கலாம்.

கோழிகளின் வளர் பருவ மேலாண்மை

  • வளரும் கோழிகளின் கொட்டகையில் கோழிகளை விடுவதற்கு முன்னால் அக்கொட்டகையினை நன்றாக சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
  • கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அவற்றிற்கு இட வசதி, தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஆழ்கூளக் கொட்டகைகளில் ஆழ்கூளத்தை 4 இஞ்ச் உயரத்திற்குப் பரப்பி விட வேண்டும்.
  • தீவன மற்றும் தண்ணீர்த் தொட்டிகளை கொட்டகையில் அமைக்க வேண்டும்.
  • கோழிகளின் தேவைக்கேற்றவாறு தண்ணீர் மற்றும் தீவனத்தட்டுகளை மாற்ற வேண்டும்.
  • கோழிகளின் வளரும் பருவத்தில் வரையறுக்கப்பட தீவன மேலாண்மை முறையினைப் பின்பற்றுவதால் கோழிகளின் வளரும் பருவத்தில் அவை அளவிற்கு அதிகமான உடல் எடையினை அடைவதையும், விரைவில் இனப்பெருக்க முதிர்ச்சியையும் தடுத்து அதிக முட்டை உற்பத்தியைப் பெறலாம்.
  • ஆழ்கூளத்தை முறையாக மேலாண்மை செய்வதால் இரத்தக்கழிச்சல் போன்ற நோய்கள் கோழிகளுக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • திறந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைகளில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வெளிச்சம் இருந்தாலே போதுமானது. செயற்கை வெளிச்சம் தேவையில்லை.
  • கொட்டகையில் ஒரே மாதிரியாக கோழிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை கோழிகளின் எடையினைப் பரிசோதித்து கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்களின் ஆலோசனைப் படி உடல் எடை அதிகரிக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி, மருந்துகள் அளித்தல் மற்றும் இதர மேலாண்மை முறைகளான குடற்புழு நீக்கம் செய்தல், அலகு வெட்டுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
  • வரையறுக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட அளவு மட்டுமே தீவனம் அளித்தல் 
    இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் வளரும் பருவத்திலிருக்கும் முட்டைக் கோழிகளுக்கு இந்தத் தீவன மேலாண்மை முறை பின்பற்றப்படுகிறது. இதில் இரண்டு முறைகள் உள்ளன.

    தீவனத்தின் அளவினைக் குறைத்தல் 
    இம்முறையில் கோழிகளுக்குத் தேவைப்படும் தீவனத்தில் குறைந்த அளவையே அவைகளுக்குக் கொடுக்கப்படும். தினந்தோறும் தீவனத்தின் அளவினைக் குறைக்கலாம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ தீவனம் அளிக்கலாம். ஆனால் இவ்வாறு தீவனமளிப்பதைக் குறைப்பது பண்ணையிலுள்ள மொத்தக் கோழிகளின் உடல் எடை மற்றும் உற்பத்தியாளர் பரிந்துரைக்கப்பட்ட உடல் எடை போன்றவற்றைப் பொறுத்து கணக்கிடப்பட வேண்டும். 

Thursday, January 15, 2015

இயற்கை முறையில் இமாம்பசந்த் - மகசூல் கூட்டும் மகத்தான தொழில்நுட்பங்கள்

ரசாயன விவசாயமாக இருந்தாலும் சரி... இயற்கை முறை விவசாயமாக இருந்தாலும் சரி... வழக்கமாகக் கடைப்பிடிக்கும் சாகுபடி முறைகளோடு சில தொழில்நுட்பங்களைச் சேர்க்கும்போது விளைச்சலில் அபரிமிதமான மாற்றங்கள் உண்டாகின்றன. பல விவசாயிகள் இதை அனுபவப்பூர்வமாக நிரூபித்து வருகின்றனர். திண்டுக்கல், துரைபாண்டியன் அத்தகையோரில் ஒருவர். இவர், கிட்டத்தட்ட 98% இயற்கை முறை விவசாயத்தில் மா சாகுபடி செய்துவருகிறார்!
திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் 19-வது கிலோமீட்டரில் உள்ள கம்பிளியம்பட்டி எனும் கிராமத்தில் இருக்கிறது, துரைபாண்டியனின் மாந்தோப்பு. தோப்பைச் சுற்றியுள்ள நிலங்களில் கடுமையான வறட்சி காரணமாக புற்கள்கூட கருகியிருக்கும் நிலையிலும், இவருடைய மாந்தோப்பு மட்டும் பசுமை கட்டி நிற்கிறது. முறையாக கவாத்து செய்யப்பட்ட மா மரங்களில் கொத்துக்கொத்தாக காய்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நான்கு மா மரங்களுக்கு இடையில் ஒரு தென்னை... ஒவ்வொரு தென்னையைச் சுற்றியும் வாழை மரங்கள்... என அணிவகுத்து நிற்கின்றன. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கொட்டகையில் அமர்ந்திருந்த துரைபாண்டியனைச் சந்தித்தோம்.
இமாம்பசந்த் ரகத்துக்கு அதிக விலை!
''லாரி டிரான்ஸ்போர்ட்தான் எனக்கு பிசினஸ். திண்டுக்கல்லுல ஒரு கல்யாண மண்டபம் இருக்கு. ரெண்டையும் பாத்துக்கிட்டு விவசாயத்தையும் செஞ்சிட்டு இருக்கேன். இந்த இடம் ஒரு காலத்துல கல்லுக் காடா இருந்துச்சி. 30 வருஷத்துக்கு முன்ன மா நடலாம்னு முடிவு செஞ்சேன். இது சம்பந்தமா என்னோட சொந்தக்காரர் பாஸ்கரன்கிட்ட பேசினப்போ, 'நல்ல யோசனை’னு தெம்பு கொடுத்தார். உடனே, ஆந்திர மாநிலம் 'ஜிதிகுப்பா’ங்கிற இடத்துக்குப் போய், கல்லாமை, செந்தூரம், பெங்களூரா, இமாம்பசந்த்னு பல ரகங்கள்ல தரமான மாங்கன்னுகளை வாங்கிட்டு வந்து நட்டோம். எல்லாம் வளர்ந்து காய்ப்புக்கு வந்த சமயத்துல, 4 இமாம்பசந்த மரங்கதான் இருந்துச்சு. ஆனா, அந்த ரகத்துக்குத்தான் அதிக விலை கிடைச்சிது. அதனால, தோப்பு முழுக்க இமாம்பசந்த் ரகத்தையே நட்டுடலாம்னு முடிவு செஞ்சிட்டோம். அதுக்காக, இமாம்பசந்த் பத்தின விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்னு நானும், பாஸ்கரனும் அலைஞ்சப்போ, ஒரு தகவல் கிடைச்சிது.
ஒட்டுச்செடியில் ஆண்டு முழுவதும் காய்ப்பு!
ஆந்திராவைச் சேர்ந்த தோட்டக்கலைப் பேராசிரியர் ஒருத்தர், 'இமாம்பசந்த், ஒரு வருஷம்விட்டு ஒரு வருஷம்தான் நல்ல மகசூல் கொடுக்கும். ஆனா, ஒரு சின்ன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வருஷம் முழுக்க காய்க்க வைக்க முடியும். ஃபீனா ரக மாஞ்செடியை (நீலம் ரக மாம்பழத்தை ஆந்திர மாநிலத்தில் இந்தப் பெயரில்தான் அழைக்கிறார்கள்) வேர்ச்செடியாகவும், இமாம்பசந்த்தை தாய்ச் செடியாகவும் வெச்சி ஒட்டுக்கட்டி... தரமான இமாம்பசந்த் செடிகளை உருவாக்கினா, மகசூலும் நல்லா இருக்கும். வருஷம் முழுசும் காய்க்கும்’னு சொல்லி... ஃபீனா ரகச் செடிகளை வாங்கிக் கொடுத்து, ஒட்டுக் கட்டுறதுக்கு ஆட்களையும் ஏற்பாடு செஞ்சி கொடுத்தாரு. ஃபீனா ரகம் நல்ல சுவையா இருக்கறதோட பழமும் பெருசா இருக்கும். அவர் சொன்ன மாதிரி ஒட்டுக் கட்டி நாத்து உருவானதும்... தோட்டத்துல இருந்த மத்த மரங்களை எல்லாம் வெட்டிட்டு... முழுக்க இமாம்பசந்த் செடிகளை நட்டுட்டோம். இப்போ, மொத்தம் 21 ஏக்கர்ல 800 இமாம்பசந்த் இருக்கு. கூடவே, மகரந்தச் சேர்க்கைக்காக சேலம், பெங்களூரா, செந்தூரம் ரகங்கள்ல 250 மரங்களை வெச்சிருக்கோம்'' என்ற துரைபாண்டியன், தொடர்ந்தார்.
''மரங்கள் எல்லாம் ஒவ்வொரு வருஷமும் நல்ல மகசூல் கொடுக்குது. ஆரம்பத்துல வெச்ச நாலு தாய் மரங்களும் இன்னமும் நல்லா காய்ச்சிட்டு இருக்கு. அதுல மறுபடியும் ஒட்டுக் கட்டி அடர்நடவு முறையில
20 ஏக்கர்ல இமாம்பசந்த் நடப்போறோம். தோப்புக்கு கிணத்துப் பாசனம்தான். ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கிணத்துல இருந்து, தண்ணி கொண்டு வந்து சொட்டு நீர் மூலமா பாசனம் பண்றோம். கடுமையான வறட்சியிலயும் மரங்களைக் காய விடாம வெச்சிருக்கறது, சொட்டு நீர்தான்'' என்ற துரைபாண்டியன், இமாம்பசந்த் சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே.

இயற்கை வழி உழவில்லா வேளாண்மை

ஒருவர்க்கு நிலம் எத்தனை ஏக்கர் இருப்பினும் சுற்றிலும் அதற்கு வரப்பிட்டு வரப்பிலிருந்து 4 அடி உள் பக்கம் தள்ளி பனங்கொட்டையை வேலி போல் 4 அடிக்கு ஒன்று வீதம் நட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் நிலத்தின் உள்ளே நீர் சேமிப்பின் ஊற்றுக் கண். பனை மர வட்ட வரிசையை அடுத்து மேலும் உட்புறமாக அதேவட்ட வரிசையில் 6 அடி தள்ளி ரோஸ்வும் மரக்கன்றுகள் அல்லது உழவன் விரும்பும் காட்டு ரக மரங்கள் எதையேனும் ஒன்றினை 15 அடிக்கு ஒன்று என நடவேண்டும். இஃது நீண்ட நாள் சுமார் 25 ஆண்டுகளில் வருவாய் தரும். அடுத்து மேலும் உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி 15 அடிக்கு ஒன்று வீதம் வடுமாங்காய் (உயர்தர ஊறுகாய்க்கு மட்டும்) கன்றுகள் நடலாம். இவை 7 முதல் 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் தரும். நான்காவது உட்புற வட்ட வரிசையில் 15 அடி தள்ளி இடைவெளி 10 அடி வீதம் அகர்வும் எனும் (ஊறுவத்தி தயாரிப்புக்குரிய மூல பொருள்) மரக்கன்றுகள் நடலாம்.
10599244_720479834655039_6865054303809208384_n

அகர்வும் நடுவதற்கு முன்னதாக கன்று ஒன்றுக்கு மேற்கு திசையில் 5 அடி தள்ளி வாழை நட்டு வளர்த்து பின்னர் நடவு செய்தால் அகர்கன்றுகள் பழுதின்றி வளரும். குளிர்ச்சியான சூழல் அகர்வுக்கு மிகவும் அவசியம். பத்து ஆண்டுக்கு ஒரு முறை என மூன்று அறுவடை செய்யலாம். 30 ஆண்டுகள் 1 தலைமுறைகடந்த பின், முன்னதாக இரு மரங்கட்கு இடையில் அதே அகர் மரக்கன்றுகள் நட்டு பயனை அடுத்த தலைமுறைக்கும் கொடுக்கலாம். ஊறுகாய் மாங்காய் தொடர்ந்து 35 ஆண்டுகள் பலன் தரும். அகர் போல் முன்னதாகவே இரு மரங்கட்கு இடையில் புதிய வடுமாங்காய் கன்றுகள் நட்டு பயனை அடுத்து வாரிசிடம் ஒப்படைக்கலாம்.

மேற்கண்ட மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக சிறு தானியங்களை விதைத்து அறுவடை செய்யலாம். பசுமையான மூடாக்கு எப்போதும் தரலாம். நம் பராம்பரியம் / பண்டைய வேளாண்மையையும் பின்பற்றுவது இனிவரும் காலத்தின் கட்டாயம். இன்றைய வேதனையுற்ற உழவன் இயற்கை விவசாயத்தில் நெல், சிறு தானியங்கள், காய்கறிகள், கீரைவகைகள், கிழங்குவகைகள் இன்னோரன்ன எதையும் செய்யலம். ஊக்கமது கைவிடோல் – என்ற ஒளவை வாக்கு இன்றும் பொருந்தும். சிந்தையில் இருத்த வேண்டியதை இனி காண்போம்: ஒன்றும் செய்யாத விவசாயம் – ம்லி ஹிலிமிஜுஷ்ஐஆ மிழிஸதுஷ்ஐஆ என்று சொல்லப்பட்ட ஒன்றை வைக்கோல் புரட்சி பற்றி தெளிவாக அறிதல் நன்று. இதை செய்வித்தவர் ஐப்பான் நாட்டு ஓர் ஆராய்ச்சியாளர் திரு.மாசாழைஃபுக்குவோக்கா – என்பவர் ஆவார். அவர் பாரம்பரிய நெல் 6 மாத வயதுடையதையும், அந்நாட்டுக்குரிய பார்லியையும் விளைவித்து அறுவடை செய்திட்டார் எப்படி? பருவத்தில் முதலில் நெல்லை தூவி விடுவார் பூமியின் மேல் மானாவாரியில் இப்படி செய்தலால் மழையே விளைச்சலுக்கு ஆதாரம்.

நெல் விளைந்து அறுவடைக்கு சற்று முன்னதாக அதே நிலத்தில் பார்லி என்ற தானியத்தை விதைப்பார். எப்போதும் நிலத்தில் ஈரமிருந்து வருவதால் பார்லியும் முளைக்கும். நெல் கதிர்களை மட்டும் அறுத்து எடுத்து அதன் தாளை (வைக்கோல்) நிலத்தில் அப்படியே விட்டுவிடுவார். ஓர் ஆண்டு முடியும். மீண்டும் நெல்லை தூவுவார். சுழற்சி முறையில் தாள்கள் மட்டும் அப்படியே இருந்தன. நுண்ணுயிர்கள் தானே வளர்ந்து பெருகின. அதனால் பயிர் நன்கு வளர்ந்தது. அமோக விளைச்சல் தந்தது. பெங்களூர் வாழ் திரு.நாராயண ரெட்டி சொன்னார் – நிலம் நமது தாய். அவளை ஆடையில்லாமல் (மூடாக்குப் போடாமல்) நிர்வாணமாக வைக்கலாமா – என்று இதை அறிந்த ஜப்பானின்ஃபுக்குவோகா பெங்களூர் வந்து நாராயண ரெட்டியாரைச் சந்தித்தார். கட்டிப்பிடித்து பாராட்டினார்.