Saturday, October 4, 2014

கால்நடைகளைக் காப்போம் விவசாயத்தை மீட்போம்
























மகால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் 'சுளீர்'பேட்டி!
‘‘விவசாயம் பொய்த்துப் போனாலும், ஆடு, மாடுகள் விவசாயிகளுக்குச் சோறு போடும். விவசாயத்தையும், கால்நடையையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, கால்நடைகளை புறக்கணிக்க தொடங்கியதால்தான் விவசாயத்தில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது''
-இப்படிச் சொல்வது 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரோ... அல்லது 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கரோ அல்ல... கிராமிய மணம் கமழ இப்படிச் சொல்பவர் டாக்டர்.ப. தங்கராஜு. இவர், சென்னையிலிருக்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர்.
பால் வாசம் 'கமகம'க்க வரிசையாக பால் வண்டிகள் வரிசைக் கட்டி நிற்கின்றன... ம்ம்மா.. என்று மாடுகள் கோஷ்டி கானம் பாடுகின்றன... 'ம்மே' என்று ஆடுகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றன... இத்தனையும் சென்னையை உரசிக்கொண்டிருக்கும் மாதவரம் பால்பண்ணை வளாகத்தில்தான். இதற்குள்தான் இருக்கிறது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.
'ஆர்கானிக் விவசாயம்' எனப்படும் இயற்கை வேளாண்மை இன்று பரபரப்பாக பேசப்படுகிறது. விவசாயி களால் பரவலாக மேற்கொள்ளப்படும் ஒன்றாகவும் இருக்கிறது. அதேபோல 'ஆர்கானிக் பால்', 'ஆர்கானிக் முட்டை' போன்ற பேச்சுக்களும் இன்னொரு பக்கம் றெக்கை கட்ட ஆரம்பித்திருக்கிறது. 'இதெல்லாம் எந்த அளவுக்கு இங்கே சாத்தியம்... கால்நடைத்துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பது போன்ற கேள்விகளுடன் துணைவேந்தர் தங்கராஜுவைச் சந்தித்தோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தளவு இப்போது உற்பத்தி செய்யப்படும் பால், ஆர்கானிக் தரத்தில்தான் இருக்கிறது. கிராமப்புறத்தில் உள்ள எந்த விவசாயியும் அதிக பால் வேண்டும் என்று 'ஹார்மோன்' ஊசியைப் போடுவதில்லை. கடையில் விற்கும் தீவனங்களை பெரும்பாலும் வாங்குவதில்லை. பசுந்தீவனங்கள், தவிடு, புண்ணாக்கு போன்றவற்றைக் கொடுத்தே வளர்த்து வருகிறார்கள். ஆகையால், இப்போது கிடைக்கும் பாலில் நஞ்சு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
அதேசமயம், ஆர்கானிக் பால் என்று பிரித்துப் பார்த்தால், அது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தீவனத்தில் இருந்தே தொடங்குகிறது. நிலத்தில் ரசாயனம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் போட்டு பசுந்தீவனங்களை வளர்த்து, மாடுகளுக்குக் கொடுத்தால், அது நூறு சதவிகித 'ஆர்கானிக் பால்' என்று சொல்லலாம். இதை தமிழ கத்தில் எல்லோரும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால், ஆர்கானிக் பால் விஷயத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும்.''
''ஜெர்சி போன்ற வெளிநாட்டு இன மாடுகளை வளர்க்கச் சொல்லியே விவசாயிகளை அரசு தூண்டுகிறது. இதனால் நாட்டு மாடுகள் அழிந்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?''
''இங்கே முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நம் மண்ணுக்குரிய மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காங்கேயம், உம்பளச்சேரி உள்ளிட்ட நம்நாட்டு இனங்களை அரசு கால்நடைத்துறை பாதுகாத்து வளர்த்து வருகிறது.''
''வெளிநாட்டு மாடுகளான ஜெர்சி, பிரிசியன் போன்ற வைகளை வளர்க்க வேண்டாம். இதனால் நஷ்டம்தான் ஏற்படும். நாட்டுமாடுகளே போதும் என்கிறார்களே?''
''ஓரளவு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஜெர்சி போன்ற மாடுகள் குளிர் பிரதேசத்தில் இருந்தவை. அவை, நம்நாட்டின் வெப்பச் சூழலை தாங்கி வளரமுடியவில்லை. உதாரணத்துக்கு, நமது மாடுகளில் வெப்பத்தை வெளியேற்ற வியர்வை சுரப்பிகள் உண்டு. இதில், பத்தில் ஒரு பங்குதான் வெளிநாட்டு மாடுகளிடம் இருக்கிறது. எனவேதான் அவைகளால் பெரும்பாலும் நம் சூழ்நிலைக்குத் தாக்குபிடிக்க முடியவில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தளவு இப்போது உற்பத்தி செய்யப்படும் பால், ஆர்கானிக் தரத்தில்தான் இருக்கிறது. கிராமப்புறத்தில் உள்ள எந்த விவசாயியும் அதிக பால் வேண்டும் என்று 'ஹார்மோன்' ஊசியைப் போடுவதில்லை. கடையில் விற்கும் தீவனங்களை பெரும்பாலும் வாங்குவதில்லை. பசுந்தீவனங்கள், தவிடு, புண்ணாக்கு போன்றவற்றைக் கொடுத்தே வளர்த்து வருகிறார்கள். ஆகையால், இப்போது கிடைக்கும் பாலில் நஞ்சு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
அதேசமயம், ஆர்கானிக் பால் என்று பிரித்துப் பார்த்தால், அது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தீவனத்தில் இருந்தே தொடங்குகிறது. நிலத்தில் ரசாயனம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் போட்டு பசுந்தீவனங்களை வளர்த்து, மாடுகளுக்குக் கொடுத்தால், அது நூறு சதவிகித 'ஆர்கானிக் பால்' என்று சொல்லலாம். இதை தமிழ கத்தில் எல்லோரும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால், ஆர்கானிக் பால் விஷயத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும்.''
''ஜெர்சி போன்ற வெளிநாட்டு இன மாடுகளை வளர்க்கச் சொல்லியே விவசாயிகளை அரசு தூண்டுகிறது. இதனால் நாட்டு மாடுகள் அழிந்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?''
''இங்கே முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நம் மண்ணுக்குரிய மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காங்கேயம், உம்பளச்சேரி உள்ளிட்ட நம்நாட்டு இனங்களை அரசு கால்நடைத்துறை பாதுகாத்து வளர்த்து வருகிறது.''
''வெளிநாட்டு மாடுகளான ஜெர்சி, பிரிசியன் போன்ற வைகளை வளர்க்க வேண்டாம். இதனால் நஷ்டம்தான் ஏற்படும். நாட்டுமாடுகளே போதும் என்கிறார்களே?''
''ஓரளவு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஜெர்சி போன்ற மாடுகள் குளிர் பிரதேசத்தில் இருந்தவை. அவை, நம்நாட்டின் வெப்பச் சூழலை தாங்கி வளரமுடியவில்லை. உதாரணத்துக்கு, நமது மாடுகளில் வெப்பத்தை வெளியேற்ற வியர்வை சுரப்பிகள் உண்டு. இதில், பத்தில் ஒரு பங்குதான் வெளிநாட்டு மாடுகளிடம் இருக்கிறது. எனவேதான் அவைகளால் பெரும்பாலும் நம் சூழ்நிலைக்குத் தாக்குபிடிக்க முடியவில்லை.
நம் நாட்டுமாடுகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றபடி உருவாகியுள்ளன. சேற்று உழவு செய்ய உம்பளச்சேரி (சோழ மண்டலம்), கடின வேலைகளுக்கு காங்கேயம் (கொங்கு மண்டலம்) என வகை வகையாக இங்கேயே இருக்கின்றன.
'உம்பளச்சேரி மாடு' என்பது குட்டையான கால்களுடன் இருக்கும். அதனால்தான் வயல் சேற்றில் கால் புதைந்து போகாமல் அவை நன்றாக உழவு செய்கின்றன. அந்த மாடுகள் சுமார் 8 மணி நேரம் சோர்வு அடையாமல் வயலில் வேலை செய்யும் என்பது ஆச்சர்யமூட்டும் செய்தி.
காங்கேயம் ரக மாடுகள் அசராமல் உழைக்கும். விவசாயிகளுடன் போட்டிப்போட்டுக் கொண்டு வேலை செய்யும்.
ஆக, நாட்டுமாடுகள் நம் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஏற்றவைதான் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். நாட்டு மாடுகள் குறைந்து போனதற்கு விவசாயிகளும் ஒரு காரணம். அதிக அளவில் இயந்திரங்கள் வந்ததும், மாடுகளை ஓரங்கட்டிவிட்டனர். அதனிடம் இருந்து இயற்கை உரங்கள் கிடைக்கும் என்பதற்காகவாவது அவற்றை வைத்திருக் கலாமே!''
''நாட்டு மாடுகள் அதிகம் பால் கொடுக்காது. அதை வளர்த்தால் நஷ்டம்தான் ஏற்படும் என்றும் ஒரு கருத்து உள்ளதே?''
''நம் முன்னோர்கள் மிகுந்த புத்திசாலிகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து வைத்துள்ளார்கள். வேலைகளை செய்ய ஒரு மாடு, பால் கொடுக்க ஒரு மாடு, உரம் கொடுக்க மற்றொரு மாடு என்று வகைப் படுத்தி வைத்துள்ளார்கள். வேலை செய்யும் மாட்டிடம், பால் உற்பத்தி அதன் கன்றுக்குத் தேவையான அளவுதான் இருக்கும். அதாவது, ஒன்று அல்லது இரண்டு லிட்டர் மட்டுமே இருக்கும்.
நாட்டு மாடுகளிலும் அதிக பால் கொடுக்கும் திறன் கொண்ட ரகங்கள் உள்ளன. சாகியவால், சிந்தி, தார்பார்க்கர் போன்றவை 5 முதல் 10 லிட்டர் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டவை. நமது நாட்டு இனங்களிலேயே அதிக பால் தரும் இப்படிப்பட்ட இனங்களை தேர்ந்தெடுத்து வளர்க்கலாம். நம்நாட்டு மாடுகளின் பலத்தை அறிந்த பிரேசில் விஞ்ஞானிகள், நம்முடைய ஒங்கோல் மாட்டை தங்களது நாட்டுக்கு எடுத்துச் சென்று, இறைச்சிக்காக வளர்க்கிறார்கள். கென்ய நாட்டினர், நம்முடைய சாகியவால் இனத்தை எடுத்துச்சென்று பால் உற்பத்திக்கு முயற்சித்து வருகிறார்கள். நம்முடைய தார்பார்க்கர், சாகிய வால் போன்ற ரகங்களை ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு சென்று, 'ஆஸ்திரேலியன் ஜீபு' என்ற பெயரில் புதுரகம் உருவாக்கியுள்ளனர். நம்முடையது நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கது என்பதற்காகவே ஆஸ்திரேலியர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி உலக அளவில் இந்திய மாட்டு இனங்கள் மீது ஒரு கண் உண்டு. அந்தளவுக்கு நம் நாட்டு இனங்களிடம் வளங்கள் நிறைந்து கிடக்கின்றன.''
''நாட்டு மாடுகளை பாதுகாப்பதற்காக அரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?''
''தேசிய கால்நடை மரபியல் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு, நாடு முழுக்கவுள்ள நாட்டு இனங்கள் குறித்த கணக்கெடுப்பு ஏற்கெனவே நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத் தவரை காங்கேயம் இனத்தில் இரண்டரை லட்சம், உம்பளச்சேரி இனத்தில் இரண்டு லட்சம் மாடுகள் உள்ளதாக தெரிய வந்திருக்கிறது. ஆலம் பாடி எனப்படும் வண்டி இழுக்கும் மாடுகளின் எண்ணிக்கை மிகவும் கவலை தரும் விதத்தில் இருக்கிறது. மொத்தமே ஆயிரத்துக்குள்தான் இருக்கின்றன.
தமிழகத்தில் எட்டு செம்மறியாட்டு இனங்கள் உள்ளன. திருநெல்வேலிப் பகுதிகளில் வளர்க்கப் பட்டு வந்த கீழக்கரிசல் செம்மறி ஆடு மொத்தம் 5 ஆயிரம்தான் இருக்கிறது. இது மிக மிகச் சிறந்த ரகம். இதைக் காக்கத் தவறிவிட்டோம். நீலகிரியில் தோடா எருமை மாடுகள் 5 ஆயிரம்தான் உள்ளன. இது மிகவும் அரிய இனம். இப்போது அருகிய இனமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.
நாட்டு மாடுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காகத்தான் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அதேசமயம், ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய நிலத்தைப் பேணிக் காப்பதுபோல நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும். அது அவர்களது கடமை.
காங்கேயம் இனத்தை பாதுகாக்க ஒரு சங்கம் ஈரோடு பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. 'குரங்கு ஆடு' என்கிற ரக ஆடுகளை மதுரையிலிருக்கும் சேவா சங்கம் பாதுகாத்து வருகிறது. இதேபோல உம்பளாச்சேரி, பர்கூர், ஆலம்பாடி இனங்களை பாதுகாக்கவும் சங்கம் அமைக்கவும் விவசாயிகள் முன் வரவேண்டும். அவர் களுக்கு தேவையான வழிக்காட்டுதலை அரசும், பல்கலைக்கழகமும் செய்யத் தயாராக இருக்கின்றன.
பிரதமரின் அவசரகால நிவாரண நிதியைப்போல, நாட்டு மாடுகளை பாதுகாக்கவும் நிதி உதவி திட்டத்தை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.''
''கால்நடை வளர்ப்பவர்களைப் பொறுத்தவரை, அரசுத்துறைகளிடம் இருந்து தொழில்நுட்ப அறிவுரைகள் பெறுவதில் சிரமம் இருப்பதாகச் சொல்கிறார்களே?''
''இன்றைக்கு விவசாயத்தைக் காட்டிலும் அதிக வருவாய் கொடுக்கக் கூடியதாக கால்நடை வளர்ப்பு இருக்கிறது. அவற்றை அறிவியல் பூர்வமாக செய்தால் கூடுதல் லாபம் பெற முடியும். பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுக்க கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள்-17, உழவர் பயிற்சி மையங்கள்-3, வேளாண் அறிவியல் நிலையங்கள்- 3 செயல்பட்டு வருகின்றன. மாதம்தோறும் விவசாயிகளுக்கு வேண்டிய தொழில்நுட்ப அறிவுரைகளும், பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் கறவை மாடு, ஆடு, கோழி, மீன் போன்றவை குறித்து அஞ்சல் வழியில் சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சேர்ந்தும் விவசாயிகள் கால்நடைத் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.
இப்பல்கலைக்கழகமே விவசாயிகளுக்காகத்தான் செயல்பட்டு வருகிறது. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எங்கள் விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். உரிய உதவிகள் கிடைக்காவிட்டால் எனது அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். உடனே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று உறுதியான குரலில் சொன்னார்.
தொடர்புக்கு துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை வளாகம், சென்னை-600051, தொலைபேசி 044-25551574.


நன்றி: பசுமை விகடன்

No comments:

Post a Comment